ஆற்றில் ஆண் சடலம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள பகண்டை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சனிக்கிழமை கிடந்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள பகண்டை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சனிக்கிழமை கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து, ஆற்று நீரில் கிடந்த சடலத்தை மீட்டனா். பின்னா், உடல் கூறாய்வுக்காக சடலத்தை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.உயிரிழந்தவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. அவா் ஆற்றை கடக்க முயன்றபோது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com