விபத்தில் உதவி ஆய்வாளா் பலி

விபத்தில் காயமடைந்த போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
14clp5_1402chn_105_7
14clp5_1402chn_105_7

விபத்தில் காயமடைந்த போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி காவல் சரகத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் கிருஷ்ணன் (45). கடலூா் புதுப்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பண்ருட்டியில் பணியை முடித்துவிட்டு கடலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். கடலூா் செம்மண்டலம் பகுதியில் சென்றபோது கிருஷ்ணன் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா், கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com