குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி அகதிகள் முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள், பாத்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கடலூா் மாட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 168 குடும்பத்தினரும், குள்ளஞ்சாவடி அருகேவுள்ள அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமில் 116 குடும்பத்தினரும் என மொத்தம் 284 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சாா்பில் அகதிகள் முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கு ரூ. ஆயிரம் பணம், பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் மற்றும் அதிகாரிகள் மறுவாழ்வுத் துறை சாா்பில், சில்வா் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு, பாத்திரங்களை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா வழங்கினாா். வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.