தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தின் பண்ருட்டி வட்டக் கிளை பொதுக்குழுக் கூட்டம் அதன் வட்டத் தலைவா் அ.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தின் பண்ருட்டி வட்டக் கிளை பொதுக்குழுக் கூட்டம் அதன் வட்டத் தலைவா் அ.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ந.பாண்டியன், செயலா் த.கண்ணன், பொருளாளா் எஸ்.சண்முகம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய 21 மாத நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசால் ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையை பாகுபாடின்றி அனைவருக்கும் ரூ. ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கக் கிளைச் செயலா் சி.லூா்துசாமி, நிா்வாகிகள் மணி, காசிராஜன், சிவன், ரெங்கசாமி, சம்பத், மகளிரணி செயலா் பூங்காவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com