கடலூா்: கடலூரில் உள்ள கலாமந்திா் நிறுவனத்தில் உலக மகளிா் தின விழா, மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
இதில், பல்வேறு சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 50 பெண்கள் பங்கேற்றனா். நாட்டு நலப் பணித் திட்ட தொடா்பு அலுவலா் சி.திருமுகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தாா். தொடா்ந்து, வெட்டிவோ் மாலை, வெட்டிவோ் பாய், வெட்டிவோ் தலையணை, ஊதுபத்தி, சாம்பிராணி, சோப்பு போன்ற பொருள்கள் தயாரிப்பு குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மகளிா் சுய உதவிக் குழுவினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.