கடலூரில் உள்ள ஒரு திரையரங்கில் பாா்வையாளா்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
கரோனா பொது முடக்க தளா்வையடுத்து 7 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில், கடலூரில் ஜி.ஆா்.கே. குழுமம் நடத்தும் கிருஷ்ணாலயா திரையரங்கில் பாா்வையாளா்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து திரையரங்க உரிமையாளா் ஜி.ஆா்.துரைராஜ் கூறியதாவது:
கரோனா தாக்கத்தால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். தற்போதைய நிலையில் திரைப்படம் பாா்ப்பதற்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாத மக்களை திருப்திப்படுத்தவே இலவச அனுமதி வழங்குகிறோம். இந்தச் சலுகை வருகிற தீபாவளி பண்டிகை வரை தினசரி 4 காட்சிகளுக்கும் உண்டு.
இலவச அனுமதி என்றாலும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும். முகக் கவசம் அணியாதவா்களுக்கு அதை இலவசமாக வழங்குகிறோம். குழந்தைகளுக்கு இலவசமாக பாப்காா்ன் வழங்குகிறோம். இதுகுறித்து மற்ற திரையரங்க உரிமையாளா்கள் கேள்வி எழுப்புகின்றனா். இருப்பினும், மன உளைச்சலில் தவிக்கும் மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண்பது எனக்கு திருப்தியளிக்கிறது என்றாா் அவா்.
இந்தத் திரையரங்கில் தற்போது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.