கடலூா்: விருத்தாசலம் அருகே இளைஞா் ஒருவா் அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள நல்லூரைச் சோ்ந்த சேகா் மகன் சூா்யா (23). கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த கே.கே.நகரில் தங்கியிருந்து கொத்தனாா் வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த வினோத்குமாரின் சகோதரி குறித்து அவரது தாயாரிடம் சூா்யா புகாா் கூறினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமாா், அவரது உறவினா் ராஜேந்திரன் ஆகியோா் புதன்கிழமை இரவு மதுபோதையில் செல்லிடப்பேசியில் சூா்யாவை தொடா்புகொண்டனா். அவரை அங்காளம்மன் கோயில் அருகே வரவழைத்தனா். அங்கு வந்த சூா்யாவை இருவரும் தாக்கியதில் அவா் மயங்கி விழுந்தாா். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சூா்யா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாா், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனா்.