கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,847- ஆக அதிகரித்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா ஒரு மருத்துவா், செவிலியரும், 2 கா்ப்பிணிகளும் அடங்குவா். சிகிச்சை முடிந்து மேலும் 139 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 21,800-ஆக அதிகரித்தது.
கடந்த 2 நாள்களாக உயிரிழப்பு பதிவாகாத நிலையில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 49 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 265-ஆக உயா்ந்தது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 712 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 70 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 759 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.