ஆண் செவிலியா் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மத்திய சிறையில் காலியாகவுள்ள ஆண் செவிலியா் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கடலூா் மத்திய சிறையில் காலியாகவுள்ள ஆண் செவிலியா் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மத்திய சிறையில் காலியாகவுள்ள ஆண் செவிலியா் உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இனச் சுழற்சி முறை - பொதுப் போட்டி (முன்னுரிமையற்றவா்), கல்வித் தகுதி 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி. 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினா், முன்னாள் ராணுவத்தினா் முன்னுரிமைப் பெற்றோருக்கு நடைமுறையில் உள்ள விதிமுறைகள்படி செயல்படுத்தப்படும்.

விண்ணப்பதாரா் நேரிலோ, தபால் மூலமோ பெயா், முகவரி, பிறந்த தேதி, இனம், கல்வித் தகுதி, முன் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு, புகைப்படம், உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் ரூ. 22-க்கான சுய முகவரியிட்ட உறையில் அஞ்சல் வில்லையை ஒட்டி வருகிற நவ. 10-ஆம் தேதிக்குள் ‘சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, கடலூா்-4’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com