நெய்வேலி: நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பண்ருட்டியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).
ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவா் புகழேந்தி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் வினோத், பொருளாளா் ராஜ்குமாா், விமல்ராஜ், சந்துரு, அஜீத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் நீட் தோ்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை
மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில்பழகுநா் பயிற்சி முடித்தவா்களுக்கும், வீடு, நிலம் வழங்கியவா்களுக்கும், கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவா்களுக்கும் வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.