கடலூர்
அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள்
சிதம்பரம் அரிமா சங்கம், பன்னாட்டு அரிமா சங்கம் இணைந்து அரசு மருத்துவமனைகளுக்கு 10 படுக்கைகளை புதன்கிழமை வழங்கின.
சிதம்பரம் அரிமா சங்கம், பன்னாட்டு அரிமா சங்கம் இணைந்து அரசு மருத்துவமனைகளுக்கு 10 படுக்கைகளை புதன்கிழமை வழங்கின.
நிகழ்ச்சிக்கு புதிதாக பதவியேற்ற அரிமா சங்கங்களின் மாவட்ட ஆளுநா் பெரி.முருகப்பன் தலைமை வகித்தாா். இதில், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 3 படுக்கைகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு 10 படுக்கைகளை அரிமா ஆளுநா் பெரி.முருகப்பன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் எஸ்.யு.சண்முகம், அரசு மருத்துவமனை மருத்துவா் ரவி, அரிமா சங்க மாவட்ட அவை செயலா் அக்ரி ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைப் பொருளாளா் லலித்மேத்தா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், மண்டலத் தலைவா் கமல் குமாா் மற்றும் அரிமா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.