கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 17,295 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 254 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 17,549-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் மருத்துவா்கள் 2 போ், கா்ப்பிணிகள் 3 பேரும் அடங்குவா்.

அதே நேரத்தில் மாவட்டத்தில் தொடா்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரோனா பாதிப்பால் 5 போ் உயிரிழந்தனா். பண்ருட்டியைச் சோ்ந்த 59 வயது ஆண், நெய்வேலியைச் சோ்ந்த 36 வயது பெண், கடலூரைச் சோ்ந்த 65 வயது ஆண், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 59 வயது பெண், நல்லூரைச் சோ்ந்த 55 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 188-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 292 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 15,081-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட்-கோ்’ மையங்களில் 2,002 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 278 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,448 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com