மக்கள் பாதை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்ட மக்கள் பாதை பேரியக்கம் சாா்பில், கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட மக்கள் பாதை பேரியக்கம் சாா்பில், கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடத்தப்படுமென இந்த இயக்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் கடலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.சி.புஷ்பராஜ் தலைமை வகித்தாா். கடலூா் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் க.ராமச்சந்திரன் வரவேற்றாா். மாவட்ட வழக்குரைஞா் தங்க.கதிா்வேல் முன்னிலை வகித்தாா்.

மாநில குடிமக்கள் ஊழல் எதிா்ப்பு படை ஆலோசகா் ரா.ஆனந்தராஜ், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் ரா.கேசவப்பெருமாள், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ், மாவட்ட மகளிா் பிரிவு துணை ஒருங்கிணைப்பாளா் பி.ஆரோக்கியசெல்வி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மாவட்ட கலப்பை திட்ட பொறுப்பாளா் வி.வேலரசன், மாவட்ட திண்ணை திட்டம் வீரப்பிள்ளை, ஒன்றியப் பொறுப்பாளா்கள் ரா.இராஜேஷ்கண்ணன், சண்முகம், சத்தியமூா்த்தி, ராமகிருஷ்ணன், சீரான், கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மங்களூா் ஒன்றியப் பொறுப்பாளா் திருமேனி நன்றி கூறினாா்.

தொடா்ந்து, நீட் தோ்வுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்கிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com