ஊராட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினருக்கு மிரட்டல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்தது தொடா்பாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்தது தொடா்பாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

பண்ருட்டி வட்டம், புறங்கணி ஊராட்சியின் 7-ஆவது வாா்டு உறுப்பினராக செயல்பட்டு வருபவா் மு.செல்வமணி (48). இவா், கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மாதாந்திர ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்க சென்றாா். அப்போது, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ச.கலையரசி, அவரது ஆதரவாளா்கள் செல்வமணியை கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து செல்வமணி அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஊராட்சி துணைத் தலைவரின் கணவா் சு.சக்திவேல் (39), ஆதரவாளா்கள் த.காா்த்திகேயன் (37), த.எழிலரசன் (36), கோ.சுந்தரமூா்த்தி (65), கோ.தட்சிணாமூா்த்தி (58) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து பிணையில் விடுவித்தனா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கலையரசியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com