கடலூா்: 19 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்தது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்தது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 235 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 19,214-ஆக உயா்ந்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 424 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 17,377-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில், மேலும் 3 போ் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 207-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி, ‘கோவிட்-கோ்’ மையங்களில் 1,501 பேரும், வெளி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூரைச் சோ்ந்த 129 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 3,303 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com