முகநூலில் அவதூறு: பாஜக பிரமுகா் மீது வழக்கு

முகநூலில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா்: முகநூலில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக பிரசார அணித் தலைவா் பொன்னி ரவி. இவா் மீது பாப்புலா் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலா் மு.நஸ்ரூதீன் (34), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதில், பொன்னி ரவி தனது முகநூலில் மத துவேஷ கருத்துக்களை பரப்பி வருவதாக தெரிவித்தாா்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்திட கடலூா் புதுநகா் காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டாா். இதையடுத்து, பொன்னிரவி மீது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com