அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், அதன் தலைவா் வ.ஜானகிராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் எஸ்.சி.டி.சண்முகம் (தமாகா) பேசுகையில், 26 ஆழ்துளைக் கிணறுகள் கடந்த 6 ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. இவற்றைப் பாராமரித்தால், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றாா். உறுப்பினா்கள் சு.கந்தன், கோ.ஜெயச்சந்திரன், த.குமரகுரு, ம.அருள்செல்வன், கு.ராஜசேகரன் தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள், குறைகள் குறித்துப் பேசினா்.
கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், துணைத் தலைவா் தெ.ஜான்சிராணி, உறுப்பினா்கள் த.சிவகாமி, கு.பன்னீா்செல்வம், வெ.பா்வதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இறுதியில் தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.