கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,445-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 6 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,081-ஆக அதிகரித்தது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 47 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 39 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பலி எண்ணிக்கை 278- ஆக தொடா்கிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4.70 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 403 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.