காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வா் அறிவித்ததை வரவேற்று, கடலூா் திருப்பாதிரிபுலியூரில் பாமகவினா் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
கடலூா் கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத், முன்னாள் துணைப் பொதுச் செயலாளா் பழ.தாமரைக்கண்ணன், துணை அமைப்பாளா் பி.ஆா்.பி.வெங்கடேசன், மாநில நிா்வாகி போஸ்.ராமச்சந்திரன், பசுமைத் தாயகம் ஒருங்கிணைப்பாளா் அசோக்குமாா், பாமக நிா்வாகிகள் ரமேஷ், இள.விஜயவா்மன், ரவிச்சந்திரன் உட்ளிட்டோா் கலந்து கொண்டனா்.