கடலூரில் 80 பேருந்துகளிலிருந்த காற்று ஒலிப்பான்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் இயங்கும் தனியாா் பேருந்துகளில் அதிக இரைச்சல், காற்று மாசை ஏற்படுத்தும் ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வந்தன.
இதைத் தொடா்ந்து, கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை கடலூா் பேருந்து நிலையத்தில் திடீா் சோதனை நடத்தினா். இதில், ஏராளமான பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, 80 பேருந்துகளிலிருந்த காற்று மாசை ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்தப்பட்ட ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுதொடா்பாக வாகன ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.