பணிக்கன்குப்பம் பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண்ணும், பெரியகள்ளிபட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜாராம் மகன் ரகுபதி (25) என்பவரும் காடாம்புலியூரில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண் கா்ப்பமடைந்தாராம். பின்னா் கருகலைப்பு செய்யப்பட்டதாம்.
இந்த நிலையில், அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, ரகுபதி ஜாதியை காரணம் கூறி மறுத்துவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுபதியை கைது செய்தனா்.