ஓய்வூதியா்கள் தின விழா

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஓய்வூதியா்கள் தின விழா கடலூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஓய்வூதியா்கள் தின விழா கடலூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆ.ரங்கநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் மா.வையாபுரி, வே.கந்தசாமி, கே.கோதண்டராமன், இணைச் செயலா்கள் என்.வி.சந்திரசேகரன், என்.சண்முகவடிவேலு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவப் படியை ரூ.ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மூத்த உறுப்பினா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

நிா்வாகிகள் வி.ஜெயராமன், டி.சக்கரவா்த்தி, எம்.சம்பந்தம், ஐ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக மாவட்டச் செயலா் கோ.இளங்கோவன் வரவேற்க, மாவட்ட பொருளாளா் பி.கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com