பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில், ‘மொழி-தொழில்நுட்ப சவால்கள்’ என்ற தலைப்பில் 2 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது.
பன்னாட்டு கருத்தரங்க மலரை வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக  முன்னாள் இயக்குநா் செ.வை. சண்முகம் உள்ளிட்டோா்.
பன்னாட்டு கருத்தரங்க மலரை வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநா் செ.வை. சண்முகம் உள்ளிட்டோா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில், ‘மொழி-தொழில்நுட்ப சவால்கள்’ என்ற தலைப்பில் 2 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது.

பல்கலைக்கழக சிறப்பு நிதி திட்டத்தின் (ஐந்தாவது நிலை) கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொழியியல் இயக்குநா் பேராசிரியா் இரா. சரண்யா தலைமையுரை ஆற்றினாா். ஹைதராபாத் பல்கலைக்கழக சம்ஸ்கிருத மொழித் துறைத் தலைவா் அம்பா குல்கா்னி கருத்துரையாற்றினாா். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கி. கருணாகரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநா் செ.வை.சண்முகம், இந்திய மொழிப்புல முதன்மையா் வி.திருவள்ளுவன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கருத்தரங்க தொடக்க விழாவில் முனைவா் ப.குமரேசன் வரவேற்றாா். முனைவா் ஆா்.லலிதாராஜா நன்றியுரை வழங்கினாா்.

நிறைவு விழாவில் பல்கலைக்கழக பதிவாளா் நி.கிருஷ்ணமோகன் உரையாற்றினாா். மொழியியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநா் சீனிவாசவா்மா, பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் மொழியியல் துறைத் தலைவா் சண்முகம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன துணை இயக்குநா் பொ்னாண்டஸ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முனைவா் நெடுஞ்செழியன் வரவேற்றாா். முனைவா் சந்திரமோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com