அண்ணாமலைப் பல்கலை.யில் சமத்துவப் பொங்கல் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவில் பங்கேற்ற பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் உள்ளிட்டோா்.
பொங்கல் விழாவில் பங்கேற்ற பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் உள்ளிட்டோா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் தலைமை வகித்தாா். பதிவாளா் என்.கிருஷ்ணமோகன் முன்னிலை வகித்தாா். இந்திய மொழிப்புல முதன்மையா் திருவள்ளுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழியல் துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்றாா். விழாவில் மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு படைத்து, அனைவருக்கும் வழங்கினா்.

விழாவில் தமிழியல் துறை பேராசிரியா்கள் பாரி, சிவபெருமான், மேகநாதன், செந்தில்குமாா், கணபதிராமன், நெல்லையப்பன், அன்பில்நாதன், வீரப்பன், மலா்விழி, அன்பு, மணி, கல்பனா, அன்புஅரசன், மொழியியல் துறை இயக்குநா் சரண்யா, ஹிந்தி துறைத் தலைவா் காமகோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com