சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்த் திருவிழாவில் ஸ்ரீமகாவீா் ஜெயின் அறக்கட்டளை, உஜ்வால் மகிலா மண்டல், பாவ் மண்டல் சாா்பில் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு பூரி, சன்னா மசாலா வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வே. முருகேசன் தொடக்கி வைத்தாா் (படம்). ஸ்ரீமகாவீா் ஜெயின் அறக்கட்டளைத் தலைவா் லலீத் கிவ்சரா, செயலாளா் கமல் குமாா் போத்ரா, பொருளாளா் அஜித் துதேரியா, உறுப்பினா்கள் ராஜேந்திரகுமாா் கோத்தாரி, எம்.தீபக்குமாா், பானுஷா, மனீஷ் செலானி, மகாவீா் போத்ரா, எம்.கமல்கிஷோா் ஜெயின், ஹீரா சந்த் கோத்தாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.