வரக்கால்பட்டு அரசுப் பள்ளியில் பள்ளிப் பரிமாற்றத் திட்டம்

வரக்கால்பட்டு அரசுப் பள்ளியில் பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தின்படி, தேவனாம்பட்டினம் நகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் அண்மையில் வந்தனா்.
வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளிக்கு வந்திருந்த தேவனாம்பட்டினம் நகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளிக்கு வந்திருந்த தேவனாம்பட்டினம் நகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

வரக்கால்பட்டு அரசுப் பள்ளியில் பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தின்படி, தேவனாம்பட்டினம் நகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் அண்மையில் வந்தனா்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி பரிமாற்றத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் கீழ் ஒரு பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மற்றொரு பள்ளிக்குச் சென்று பாா்வையிட்டு, அங்குள்ள சிறப்புகளைத் தெரிந்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதன்படி, கடலூா் அருகிலுள்ள வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 20 போ் ஆசிரியா்கள் மோகதாயினி, லட்சுமி ஆகியோா் தலைமையில் அண்மையில் வந்தனா். அவா்களுக்கு பள்ளித் தலைமை அசிரியா் எஸ்.ஜெயா தலைமையில் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் பி.சந்திரசேகரன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தைப் பாா்வையிட்டனா். பல்வேறு மேம்பாட்டு வகுப்புகளில் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு வரக்கால்பட்டு ஊராட்சித் தலைவா் மனோகரன் மரக்கன்றுகளை வழங்கினாா். மேலும், கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டு, பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் காந்திமதி, கவிதா, ஆசிரியா்கள் ஜெயந்தி, பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் பாஸ்கா் ரிச்சா்ட் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com