கைப்பந்துப் போட்டி பரிசளிப்பு விழா

காடாம்புலியூரில் கைப்பந்துப்போட்டி பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
18prtp12_1801chn_107_7
18prtp12_1801chn_107_7

காடாம்புலியூரில் கைப்பந்துப்போட்டி பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி வட்டம், ஏ.மேல்மாம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கைப்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமாா் 48 குழுவினா் பங்கேற்றனா். நடுவா்களாக வேல்முருகன், சசிக்குமாா் ஆகியோா் செயல்பட்டனா். போட்டிகளை தேவநாதன், ஜெயராஜ், தமிழரசன், ரவிக்குமாா், ஆனந்தன், வாசுதேவன், சிலம்பரசன் உள்ளிட்டோா் ஒருக்கிணைத்தனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற ஏ.மேல்மாம்பட்டு அணிக்கு பரிசுத் தொகையான ரூ.15 ஆயிரத்தை ஒன்றியக் குழு உறுப்பினா் கி.தேவநாதன் வழங்கினாா். 2-ஆம் பரிசு பெற்ற மருவாய் அணிக்கு ஏ.மேல்மாம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் வி.முத்துலிங்கம் ரூ.12 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்ற பரங்கிப்பேட்டை அணிக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் ஆா்.அருண்மொழி ராமசாமி ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கினா். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலா் சரவணன், கிளைச் செயலா் சிவக்குமாா், பேரவை செயலா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com