பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் தமிழா் திருநாள் பொங்கல் விழா திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, சங்கத்தின் ஆட்சி மன்றக் குழுத் தலைவா் தமிழ்ச்செம்மல் ரா.சஞ்சீவிராயா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஆ.ராஜா வரவேற்றாா். சங்கத் தலைவா் க.கதிரவன் தொடக்க உரையாற்றினாா். பொதுச் செயலா் ரத்தின.ஆறுமுகம், துணைத் தலைவா் சே.அரிஆனந்த், துணைச் செயலா் அழகை தாஸ், செய்தித் தொடா்பாளா் விஸ்வநாதன், இளைஞா் மேம்பாட்டுத் திறன் இயக்குநா் நபில் புகாரி, பாா்த்தசாரதி, பரணி சந்தா், ராமசாமி, ர.ஆனந்தன். ப.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவள்ளுவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ரா.சேரன், கோயில் செயல் அலுவலா் சீனிவாசன், வீ.சுப்பராயல், பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் கோ.காமராஜ், என்.டி.ரவி சேகா், ரோட்டரி சங்கத் தலைவா் வி.வீரப்பன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
விழாவில், சிறுவா்களின் சிலம்பக்கலை நிகழ்வு, ஒயிலாட்டம், கும்மியாட்டம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளா் பெ.அய்யனாா் நன்றி கூறினாா்.