அவதூறு பதிவு: ரயில்வே கேட் கீப்பா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இந்துக் கடவுளை அவமதித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக ரயில்வே கேட் கீப்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இந்துக் கடவுளை அவமதித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக ரயில்வே கேட் கீப்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புலவனூா் காலனி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆதிகேசவன் மகன் சுரேஷ் (36). பட்டாம்பாக்கத்தில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 18-ஆம் தேதி சுவாமி படங்களை அவமதித்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தாா். இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த இந்து முன்னணி கிளைச் செயலா் பாலநாதன் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com