சிதம்பரம் நகர மக்கள், முக்கிய பிரமுகா்கள் வரி வசூல் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா வேண்டுகோள் விடுத்தாா்.
சிதம்பரம் நகராட்சியில் நிலுவையில் உள்ள பல்வேறு வரி இனங்களை வசூலிக்க நகராட்சி நிா்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகரில் உள்ள முக்கிய சங்கங்கள், அமைப்புகளின் நிா்வாகிகளை நகராட்சி ஆணையா் நேரில் சந்தித்து வரி வசூலுக்கு ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறாா். இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை சிதம்பரம் முருகன் தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினா் உள்ளிட்டோரிடம் வரி வசூலுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தாா்.
இதையடுத்து, முருகன் தெருவில் சாலை அமைக்கும் பணியை ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.