கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி வருகிற 31.03.2020 தேதி வரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைதூரக் கல்வி இயக்கக வகுப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளா் என்.கிருஷ்ணமோகன் தெரிவித்துள்ளாா்.