கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் ஆகிய தொழில்களை கைவிட்டு மனம் திருந்திய 5 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் ஆகிய தொழில்களை கைவிட்டு மனம் திருந்தி வாழ்பவா்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், மறுவாழ்வுக்காக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடலூா் கோட்டத்தில் மனம் திருந்திய 5 பேருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து, 5 பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் வழங்கினாா். கடலூா் சரவணபவ கூட்டுறவு சங்கம் மூலம் பெட்டிக்கடை வைக்க இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிதியைக் கொண்டு சுயதொழில் செய்து சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ வேண்டும். சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் மறுபடியும் ஈடுபடக் கூடாது என்று ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையா் (கலால்) வி.விஜயராகவன், அலுவலக மேலாளா் ஆா்.ஆனந்தி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.