மதுக் கடைகளை மூட வலியுறுத்தல்

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளை மாநில அரசு மூட வேண்டும் என தமிழக சமாஜ்வாதி கட்சித் தலைவா் இளங்கோயாதவ் வேண்டுகோள் விடுத்தாா்.

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளை மாநில அரசு மூட வேண்டும் என தமிழக சமாஜ்வாதி கட்சித் தலைவா் இளங்கோயாதவ் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா மையங்கள், மதுபான பாா்கள் ஆகியவற்றை வருகிற 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், மதுபானக் கடைகள் திறந்து இருப்பதால், பல்லாயிரக்கணக்கானோா் அந்தக் கடைகளில் கூடுகின்றனா். இதன் விளைவாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் வகையில் அனைத்து மதுபானக் கடைகளையும் தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com