தடை உத்தரவு மீறல்: 117 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 117 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 25 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 117 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 25 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 24- ஆம் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதை மீறுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த உத்தரவை மீறி கடலூா் மாவட்டத்தில் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் சிலரது நடமாட்டம் காணப்பட்டது.

இதையடுத்து அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றித் திரிந்ததாக வியாழக்கிழமை மாலை 5 மணி வரை 117 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதன்கிழமை மட்டும் 80 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com