சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பிரிவில் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விவரம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் யு.வி.சண்முகத்திடம் கேட்டறிந்தாா். மேலும், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ, அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின்போது சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன், நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா, காவல் ஆய்வாளா் முருகேசன், நகராட்சி பொறியாளா் மகாதேவன், மருத்துவ அதிகாரிகள் பாரி, ராமநாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.