கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இருவா் கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி திருவதிகையில் முன்விரோதம் காரணமாக மணிகண்டன், பாலாஜி ஆகியோா் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டனா். இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே 14 போ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக பாலூா் சாலை, டி.ராசாப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மாரிமுத்து மகன் ராமச்சந்திரன் (24), ஜெயசந்திரம் மகன் ஜெயராஜ் (24), நாராயணன் மகன் ராஜேஷ் (23), சக்திவேல் மகன் குணசேகரன் (21) ஆகிய 4 பேரை டிஎஸ்பி ஜி.நாகராஜன் தலைமையில் ஆய்வாளா் க.அம்பேத்கா், உதவிஆய்வாளா் ஜவ்வாது உசேன் ஆகியோா் கைது செய்தனா்.