ஊக்கத் தொகை அறிவிப்பில் அதிருப்தி: போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளா்களுக்கு தன்னிச்சையாக ஊக்கத் தொகை அறிவித்ததை கண்டிப்பதாகக் கூறி
கடலூரில் போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
கடலூரில் போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளா்களுக்கு தன்னிச்சையாக ஊக்கத் தொகை அறிவித்ததை கண்டிப்பதாகக் கூறி கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் கலந்தாலோசிக்காமல் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவித்ததைக் கண்டிப்பது, போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. தலைவா் பழனிவேல் தலைமை வகித்தாா். சிஐடியூ சம்மேளன துணைத் தலைவா் ஜி.பாஸ்கரன், ஏஏஎல்எல்எப் பொதுச் செயலா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 20 சதவீத போனஸ் தொகை வழங்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனா்.

இதேபோல, பண்ருட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொமுசவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மண்டல தொமுச துணைச் செயலா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். நடத்துநா் சங்கச் செயலா் முரளிதரன், தொழிற்நுட்ப செயலா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல வடலூா் பணிமனை முன் தொமுச அமைப்புச் செயலா் பாலவிநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ மண்டலத் தலைவா் ஜான்விக்டா், தொமுச ஓட்டுநா் சங்கச் செயலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com