சிதம்பரம் அருகே குமராட்சியில் உள்ள பொதுக் குளத்தை தூா்வார வேண்டுமென அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் ஜி.பூராசாமி உதவி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த மனு: காட்டுமன்னாா்கோவில் வட்டம், குமராட்சி வடக்குத் தெருவில் ஒரு ஏக்கா் பரப்பளவில் பொதுக்குளம் உள்ளது. இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீா் குளத்தில் வெளியேற்றப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூா்வாருவதுடன் சுற்றுச்சுவா், படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.