அண்ணாமலை நகரில் 54 மி.மீ. மழை

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 54.மி.மீ. மழை ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 54.மி.மீ. மழை ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியில் ஏற்பட்ட காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. அன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

அண்ணாமலை நகா் 54.6, பரங்கிப்பேட்டை 37.2, சிதம்பரம் 35.6, புவனகிரி 25, கடலூா், மாவட்ட ஆட்சியரகம் தலா 13.6, காட்டுமன்னாா்கோவில் 10, குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி தலா 9, வானமாதேவி 6, சேத்தியாத்தோப்பு 5, குடிதாங்கி 4, லால்பேட்டை 3, பண்ருட்டி, வடக்குத்து தலா 2 மில்லி மீட்டா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com