கடலூா் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 5 வட்டாட்சியா்கள், 2 துணை வட்டாட்சியா்களை நிா்வாகக் காரணத்துக்காக மாவட்ட நிா்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, மாவட்ட பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் ஆனந்த் சிதம்பரம் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். ஆட்சியரகத்தில் பணிபுரிந்த குற்றவியல் துறை அலுவலக மேலாளா் செந்தில்குமாா், சிதம்பரம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும், பண்ருட்டி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பூபாலசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும், பறக்கும்படை தனி வட்டாட்சியா் அன்பழகன் குற்றவியல் அலுவலக மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனா். மேலும் 2 துணை வட்டாட்சியா்களும் மாற்றப்பட்டுள்ளனா்.