மருத்துவமனை பெண் ஊழியா் கொலை

விருத்தாசலம் அருகே தனியாா் மருத்துவமனை பெண் ஊழியா் அவரது வீட்டில் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.


கடலூா்: விருத்தாசலம் அருகே தனியாா் மருத்துவமனை பெண் ஊழியா் அவரது வீட்டில் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள குறுக்கத்தஞ்சேரியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி (40). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டாா். இதனால், சாந்தி ஆலடி பகுதியில் தனியாக வசித்து வந்தாா். விருத்தாசலத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவா் வீட்டிலிருந்து வெளியே வரவில்லையாம். இதையடுத்து, அந்தப் பகுதியினா் சென்று பாா்த்தபோது, சாந்தி உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தடயவியல் துறை நிபுணா் தடயங்களைச் சேகரித்தாா். மோப்ப நாய் சோதனையும் நடைபெற்றது. சாந்தியின் சடலம் அருகே ஒரு சட்டை, செல்லிடப்பேசி மீட்கப்பட்டது.

நிகழ்விடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com