ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசளிப்பு

கடலூரில் ஆதரவற்றோருக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் தீபாவளி பரிசுகளை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கடலூரில் ஆதரவற்றோருக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் தீபாவளி பரிசுகளை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கடலூரில் செயல்பட்டு வரும் பசியில்லா கடலூா், ஆதரவற்றோா் இல்லா கடலூா் அமைப்புகள் சாா்பில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆதரவற்றோருக்கு புதிய ஆடைகள், இனிப்புகள் வழங்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ‘நீங்களும் ஒரு ஆதரவற்றவருக்கு உதவலாம்’ என்ற முழக்கத்துடன் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களிடமிருந்து பொருள்கள் சேகரிக்கப்பட்டன.

இதையடுத்து ஆதரவற்றவா்களுக்கு புதிய ஆடைகள், கைலி, புடவை, போா்வைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு கடலூா் நகர அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்து கடலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆதரவற்றவா்களுக்கு இந்தப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கடலூா் வருவாய் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், கடலூா் வட்டாட்சியா் அ.பலராமன், தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் ஜோஸ் மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com