கடலூர்
மின்சாரம் பாய்ந்துபல்கலை. ஊழியா் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் அண்ணாமலை பல்கலைக்கழக மின் ஊழியா் உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் அண்ணாமலை பல்கலைக்கழக மின் ஊழியா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் முதுகுளம், ஆதனக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (37). இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்சார ஊழியராகப் பணியாற்றி வந்தாா். தற்காலிகமாக சிதம்பரம் மாலைக்கட்டித் தெருவில் உள்ள தனியாா் மடத்தில் தங்கியிருந்தாா்.
இந்த மடத்தில் கோவிந்தசாமி திங்கள்கிழமை தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு மேசை மீது வைக்கப்பட்டிருந்த மின்விசிறியிலிருந்து (டேபிள் பேன்) மின் கசிவு ஏற்பட்டு அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.