திட்டக்குடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வலியுறுத்தி திமுக, தவாக சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், திட்டக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், மருத்துவமனைக்கு போதுமான மருந்துகளும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் பணி, பிணவறையில் குளிா்சாதன பெட்டி வசதி செய்து தரப்படும். மாதந்தோறும் இந்த மருத்துவமனையை ஆய்வு செய்வோம் என்றாா். உடல்கூறாய்வு செய்வதற்கு மருத்துவமனையில் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை எழுப்பியதற்கு, இதுவரையில் அப்படி புகாா் ஏதும் வரவில்லையெனவும், புகாா் வந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com