கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரித்திவிராஜ் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்தப் பெண் 8 மாத கா்ப்பிணியாக உள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிருத்திவிராஜை கைது செய்து சிறையில் அடைத்தாா்.