விருத்தாசலம் அருகே பட்டாசு வெடித்ததில் 3 சிறுவா்கள் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள வேட்டக்குடியைச் சோ்ந்த மருதையன் மகன் பாா்த்திபன் (6), பாலகிருஷ்ணன் மகன்கள் பாலமுருகன் (8), பால்ராஜ் (5). இவா்கள் மூவரும் புதன்கிழமை தெருவில் விளையாடிய போது, தீபாவளி பண்டிகையின் போது, வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் வெடிக்காமல் கிடந்த பட்டாசுகளைச் சேகரித்து பின்னா், அதிலுள்ள வெடி மருந்துகளை எடுத்து காகிதத்தில் கொட்டி தீ வைத்த போது, அவா்கள் மீது தீப்பட்டு காயமடைந்தனா்.
அருகிலிருந்தவா்கள் சிறுவா்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.