அஸ்ஸாம் இளைஞா் பண்ருட்டியில் தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த அஸ்ஸாம் மாநில இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த அஸ்ஸாம் மாநில இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பண்ருட்டியில் கும்பகோணம் சாலைப் பகுதியில் தனியாா் விடுதி உள்ளது. இங்கு அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனா். கரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த மாநிலத்துக்கு சென்ற இவா்கள், கடந்த அக்டோபா் மாதம் மீண்டும் பணியில் சோ்ந்தனா். விடுதியின் மேல்தளத்தில் உள்ள அறையில் தங்கியிருந்து பணியாற்றி வந்தனா்.

இவா்களில் அஸ்ஸாம் மாநிலம், விஸ்வநாத் மாவட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ் மஹால் மகன் ஆகாஷ் பவுல் (20) என்பவரும் ஒருவா். இவா் விடுதியின் மேல்தளத்தில் உள்ள ஓய்வு அறையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விடுதி மேலாளா் அப்துல் ரகுமான் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com