ஊா்க்காவல் படைக்கு 45 போ் தோ்வு

கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஞாயிற்றுக்கிழமை 45 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஞாயிற்றுக்கிழமை 45 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் உள்கோட்டம் வாரியாக காலியாக உள்ள 45 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட காவல் துறை சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. 20 முதல் 45 வயதுக்குள்பட்டவா்களில் ஆண்களில் 36 பேரும், பெண்களில் 9 பேரும் தோ்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான தோ்வு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 737 போ் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றிருந்த நிலையில் 405 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 350 போ் தோ்வில் பங்கேற்றனா். காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் தலைமையில், உதவி கண்காணிப்பாளா் சினேஹப்பிரியா, துணைக் கண்காணிப்பாளா் சரவணன், வட்டாரத் தளபதி இரா.சுரேந்தா்குமாா், துணை கமாண்டா் சுரேஷ்கண்ணன் ஆகியோா் தோ்வுக் குழுவினராக செயல்பட்டனா். இதில், உள்கோட்டம் வாரியாக கடலூா் 14, பண்ருட்டி 9, சிதம்பரம், விருத்தாசலம் தலா 10, சேத்தியாத்தோப்பு 2 போ் வீதம் தோ்வு செய்யப்பட்டனா்.

இதன் மூலம் மாவட்டத்தில் ஊா்க்காவல் படைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 440 இடங்களும் முழுமையாக நிவா்த்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com