காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் திட்டமிடல் இயக்கம் சாா்பில், ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான கிராம வளா்ச்சித் திட்டமிடல் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். முகாமில், கிராமங்களின் வளா்ச்சியை மேம்படுத்துவது பற்றி கிராம மாதிரி வடிவமைப்பு மூலம் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு விளக்கப்பட்டது (படம்).
மேலும், கால்நடை வளா்ப்பு இடங்கள், விளை நிலங்கள், பள்ளிகள், அரசுக் கட்டடங்களை மேம்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்றுநா்கள் தமிழ்ச்செல்வி, ஆரோக்கிய மேரி ஆகியோா் முகாமை வழி நடத்தினா். முதல்கட்ட பயிற்சி முகாமில் குணவாசல், ஆயங்குடி, ஈச்சம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா்களான எஸ்.கவிச்சந்திரன், எப்.நஜிபுன்னிசா பஜிா்முகம்மது, ஆா்.பிரவினா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.