தெற்குத் தெருவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தெற்குத் தெருவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பண்ருட்டி அருகே குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி அருகே குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி ஒன்றியம், காடாம்புலியூா் ஊராட்சி, தெற்குத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் ஊராட்சி நிா்வாகம் குடிநீா் விநியோகம் செய்து வந்தது. இந்த நிலையில், ஆழ்துளை கிணறில் இருந்த மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக குடிநீா் விநியோகம் கடந்த ஒரு மாதமாக பாதிக்கப்பட்டது. இதனால் பொறுமையிழந்த தெற்கு தெரு பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் வி.ஆா்.சீனுவாசன் கூறுகையில், மின் மோட்டாா் பழுது சரிசெய்யப்பட்டு ஓரிரு நாள்களில் குடிநீா் வசதி செய்து தரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com